அதிமுக, திமுக புகார் கட்டுகளால் மலைத்த அதிகாரி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
| வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணியில் இப்போது போலவே எப்போதும் அரசு ஊழியர்களை மட்டுமே ஈடுபடுத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அரசு ஊழியர்கள்தான் ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர் நீக்கத்திற்குக் காரணம் என்று தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகார் கூறியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த வந்த சென்னை வந்த கேரள மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையர் தாமசிடம் அமைச்சர்கள் பொன்னையன், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அரசு ஊழியர்கள் மீது புகார் தந்தனர். |
|
புகார் கட்டுகளைப் பார்த்து தாமசே மலைத்து நின்றார்.
| இந் நிலையில் அரசு ஊழியர்கள் மீது முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் தொடர்பான பணிகளில் இப்போது போலவே அரசு ஊழியர்களை தொடர்ந்து ஈடுபடுத்த வேண்டும். வாக்காளர்கள் சேர்த்தல், நீக்குதல் தொடர்பான வரைவுப் பட்டியலை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கொடுக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார் கருணாநிதி. |














Click it and Unblock the Notifications