நீர்வரத்து குறைந்தால் கபினி மூடப்படும்: தரம்சிங்

Subscribe to Oneindia Tamil

மைசூர்:

கபினி அணைக்கு நீர்வரத்துக் குறைந்தால் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்படும் என்று கர்நாடக முதல்வர் தரம்சிங் கூறினார்.

கபினி அணையில் தண்ணீர் நிரம்பி வழிவதையொட்டி சிறப்பு பூஜை செய்த பின்னர், தரம்சிங் நிருபர்களிடம் கூறியதாவது:

கபினிக்கு வரும் நீரின் அளவுக்கு தற்போது அணையிலிருந்து திறந்து வருகிறோம். ஆனால் காவிரி பாசனப் பகுதிகளிலுள்ள மற்ற 3 அணைகளான கேஆர்எஸ், ஹாரங்கி, ஹேமாவதி அணைகள் முழுவதும் நிரம்பவில்லை. எனவே அவற்றிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் 4 அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து குறைந்தால் கபினியிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்படும்

அண்டை மாநிலங்களின் ஒத்துழைப்புடன் காவிரி நதிநீர்ப் பிரச்சினையை தீர்க்கப்படும் என்று கூறினார்.

இப்போது கபினியிலிருந்து விநாடிக்கு 15,620 கனஅடிவீதம் நீர் திறந்துவிடப்படுகிறது. ஆனால் அணைக்கு விநாடிக்கு 19,550 கனஅடி நீர் வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+