கோட்டை கம்பத்தில் சிக்கிய தேசியக் கொடி !

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை தலைமைச் செயலக கொடிக் கம்பத்தில் கட்டப்பட்டிருந்த தேசியக் கொடியை கீழே இறக்கும்போது அது பாதியில் சிக்கிக் கொண்டது. இதையடுத்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து கொடி கிழிந்துவிடாமல், பத்திரமாக தரை இறக்கினர்.

தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள பிரமாண்டமான கொடிக் கம்பத்தில் தினமும் காலையில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு மாலையில் இறக்கப்படும். ராணுவ வீரர்கள் இந்தப் பணியை கவனித்து வருகிறார்கள்.

நேற்று மாலை 6 மணியளவில் தேசியக் கொடியை இறக்கும் போது அது கொடிக் கம்பத்தில் சுற்றி, சிக்கிக் கொண்டது. மீறி இழுத்தால் கிழிந்துவிடும் என்ற நிலை உருவானது.

இதையடுத்து கோட்டை வளாகத்தில் உள்ள தீயணைப்புப் படையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

இரண்டு கிரேன்களுடன் வந்த தீயணைப்புப் படையினர் சுமார் 4 மணி நேர தீவிர முயற்சிக்குப் பின் தேசியக் கொடியை பத்திரமாக மீட்டனர்.

இதனால் இரவு 11 மணியளவில்தான் தேசியக் கொடி கம்பத்திலிருந்து கீழே இறக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+