கலாமுக்கு துப்பாக்கி, தோட்டா அனுப்பியவர் கைது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு பார்சலில் துப்பாக்கியையும் குண்டுகளையும் அனுப்பிய மகேஷ் சவ் என்ற நபர் பிடிபட்டார்.
தானே தயாரித்த நாட்டுத் துப்பாக்கி மற்றும் குண்டுகளை ஜனாதிபதியின் பார்வைக்கு அனுப்பி வைத்ததாக அந்த நபர் ஒப்புக் கொண்டார்.
பிகார் மாநிலம் பாட்னாவை அடுத்த மகேஷ்சவ் அனுப்பிய அந்த பார்சல் நேற்று காலை ஜனாதிபதி மாளிகைக்கு வந்தது. எக்ஸ்ரே சோதனையின்போது பிடிபட்டது.
தனது உண்மையான முகவரியுடன் அவர் பார்சலை அனுப்பிய காரணத்தால், சில மணி நேரங்களிலேயே அவர் பிடிபட்டுவிட்டார்.
40 வயது மதிக்கத்தக்க மகேஷ்சவ், மனநிலை பாதிக்கப்பட்டவராகத் தெரிவதாக போலீசார் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications