மேட்டூர் நீர்மட்டம் 50 அடியை தாண்டியது
சேலம்:
மேட்டூர் அணையின் நீர் மட்டம் இந்த ஆண்டு முதல் முறையாக 50 அடியைத் தொட்டுள்ளது.
கர்நாடகத்தின் கபினி அணையில் நீர்மட்டம் முழு அளவை எட்டியதால் அந்த அணை திறக்கப்பட்டு, கடந்த 18ம்தேதி திறக்கப்பட்டது முதல் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இந் நிலையில் கபினி பகுதியில் மழை நின்று விட்டதால் அணையிலிருந்து திறந்து விடப்படும் நீரின் அளவைகர்நாடகம் குறைந்து விட்டது. இன்று பிற்பகல் 12 மணி நிலவரப்படி வினாடிக்கு 12,235 கன அடி நீர் மட்டுமேமேட்டூருக்கு வந்து கொண்டுள்ளது.
இதற்கிடையே இந்த ஆண்டிலேயே முதல் முறையாக இன்று மேட்டூர் அணை 50 அடியைத் தொட்டது. இப்போதுமேட்டூர் அணையில் 50.05 அடியாக உள்ளது.
அணையில் குறைந்தது 70 அடி நீர் இருந்தால்தான் குறுவைப் பாசனத்திற்குத் தண்ணீர் விட முடியும் என்பதால்அணை திறக்கப்படுவதற்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லை என்றே பொதுப் பணித்துறை அதிகாரிகள்கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications