பெரியாறு அணையில் கேரள அதிகாரிகள் ஆய்வு
மதுரை:
முல்லைப் பெரியாறு அணையில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது தொடர்பாக கேரள மாநில நீர்ப்பாசனத் துறைஅதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டதற்கு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடும் கண்டனம்தெரிவித்துள்ளனர்.
கேரள எல்லை அருகே தமிழக பகுதியில் உள்ளது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையில் அதிக நீர் தேக்கிவைப்பதற்கு கேரளம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக இரு மாநிலங்களுக்கும் இடையே பிரச்சினைஇருந்து வருகிறது.
இந் நிலையில் முல்லைப் பெரியாறு அணையில் கேரள நீர்ப்பாசனத் துறை தலைமைப் பொறியாளர் சசிதலைமையிலான அதிகாரிகள் குழு திடீர் சோதனை நடத்தியது.
அணையில் அதிக நீர் தேக்கி வைக்கப்பட்டிருப்பதால் அணையில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளதாக கேரளபத்திரிக்கைகளில் வெளியான செய்தியைத் தொடர்ந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளதாக சசிசெய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், முல்லைப் பெரியாறு அணையில் தற்போது 129.02 அடி நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டுஇதே காலத்தில் எவ்வளவு தண்ணீர் இருந்தது என்பதை ஒப்பிட்டுப் பார்ப்போம். நீர்க்கசிவு குறித்து கேரளஅரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.
தமிழகத்திற்குள் உள்ள அணையை கேரள அதிகாரிகள் தன்னிச்சையாக ஆய்வு நடத்தியதற்கு தமிழகபொதுப்பணித்துறை அதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கேரள அதிகாரிகள் அத்துமீறிநடந்துள்ளனர் என்று அவர்கள் வர்ணித்துள்ளனர்.
சமீபத்தில் கோவை மாவட்டத்தில் மலைப்பகுதியில் கட்டப்பட்டிருந்த தடுப்பு அணைகளை கேரளாவின் பாலக்காடுமாவட்ட ஆட்சித் தலைவரே அத்துமீறி நுழைந்து உடைத்தது குறிப்பிடத்தக்கது. தமிழக எல்லைக்குள் புகுந்து கேரளஅதிகாரிகள் அத்துமீறி நடப்பது அதிகரித்து வருவது தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடையே பெரும்அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications