கடலூரில் பாமக அலுவலகத்திற்குத் தீவைப்பு
கடலூர்:
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் உள்ள பாமக கட்சி அலுவலகத்திற்கு சிலர் தீவைத்தனர். இதற்கு விஜயகாந்த்ரசிகர்கள்தான் காரணம் என்று கூறி பாமக எம்.எல்.ஏ. வேல்முருகன் தலைமையில் தொண்டர்கள் சாலை மறியலில்ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
பாமகவினருக்கும், விஜயகாந்த் ரசிகர்களுக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால் வட மாவட்டங்களில் பதற்றம் கூடி வருகிறது.
இந் நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை கடலூர் அருகே உள்ள குறிஞ்சிப்பாடியில் பாமக கட்சிஅலுவலகத்திற்கு சிலர் தீவைத்தனர். இதில் கூரையால் ஆன அந்த அலுவலகம் முற்றிலும் எரிந்து சாம்பலானது.
இந்தத் தகவல் பரவியதும் பாமகவினர் அங்கு திரண்டனர். கட்சி எம்எல்ஏ வேல்முருகன் அங்கு விரைந்து வந்தார்.விஜயகாந்த் ரசிகர்கள்தான் இதற்குக் காரணம் என பாமகவினர் முடிவு செய்து குறிஞ்சிப்பாடி-கடலூர் சாலையில்மறியல் போராட்டத்தில் இறங்கினர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நெய்வேலி டி.எஸ்.பி தலைமையில் போலீஸார் திரண்டு வந்தனர்.ஆயுதப்படை போலீஸாரும் குவிக்கப்பட்டனர். சாலை மறியலை கைவிடும்படி எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்களைபோலீஸார் கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர்கள் மறுக்கவே அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.
இதற்கிடையே, குறிஞ்சிப்பாடி கட்சி அலுவலகத்தை எரித்தது தொடர்பாக விஜயகாந்த் ரசிகர் ஒருவரைபாமகவினர் பிடித்து வந்து பஸ் நிலையம் அருகே மின்சாரக் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக உதைத்தனர்.இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்து அந்த நபரை மீட்டனர். அவரது பெயர் வேலாயுதம்என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications