தமிழக அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கடிதம்
பெங்களூர்:
முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு தொடர்பான வழக்கு ஆவணங்களை தமிழக அரசுதான் தனது சொந்தப்பொறுப்பில் கர்-நாடக உயர்நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர்லட்சுமி பிரானேஷுக்கு கர்-நாடக உயர்நீதிமன்ற பதிவாளர் கடிதம் எழுதியுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு கர்-நாடக உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.இதையடுத்து ஜெயலலிதா வழக்கு தொடர்பான ஆவணங்களை கர்-நாடக உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு தமிழகஅரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந் -நிலையில் வழக்கு ஆவணங்களைக் கேட்டு கர்-நாடக உயர்நீதிமன்றம் பல-முறை தமிழக அரசு தலைமைச்செயலாளர் லட்சுமி பிரானேஷுக்குக் கடிதம் அனுப்பியது. ஆனால், தமிழக அரசு தரப்பில் பதில் ஏதும்அனுப்பப்படாமல் இருந்து வந்தது.
இந் -நிலையில், சமீபத்தில் லட்சுமி பிரானேஷ் கர்-நாடக உயர்நீதிமன்ற பதிவாளருக்கு அனுப்பிய கடிதத்தில், வழக்குஆவணங்கள் தயாராக இருப்பதாகவும், அதை எப்படி எடுத்துச் செல்லப் போகிறீர்கள் என்பது குறித்து விவாதிக்கஅதிகா-ரி ஒருவரை அனுப்புமாறும் கோ-ரியிருந்தார்.
இதற்கு கர்-நாடக உயர்நீதிமன்ற பதிவாளர் பதில் அளித்துள்ளார். அதில், வழக்கு தொடர்பான ஆவணங்களைதமிழக அரசுதான் தனது சொந்தப் பொறுப்பில் கர்-நாடக உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.இதுதொடர்பாக கர்-நாடக உயர்நீதிமன்றத்திலிருந்து யாரும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட மாட்டார்கள்என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications