தேன்கூட்டில் கை வைத்துள்ள விஜயகாந்த்: பாமக
திண்டிவனம்:
பாமக எனும் தேன்கூட்டில் நடிகர் விஜயகாந்த் கை வைத்துள்ளார். இதன் விளைவுகளை அவர் சந்தித்தே ஆகவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸின் உறவினரும், திண்டிவனம் எம்.பியுமான தன்ராஜ் எச்சரித்துள்ளார்.
திண்டிவனம் அருகே உள்ள திருக்கோவிலூரில் விஜயகாந்த் ரசிகர்கள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த பாமகஒன்றியச் செயலாளர் கண்ணன் வீட்டிற்குச் சென்ற தன்ராஜ் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் கூடியிருந்த பாமக தொண்டர்களிடையே அவர் பேசுகையில், விஜயகாந்த் தேன் கூட்டில் கை வைத்துவிட்டார். இதன் விளைவுகளை அவர் சந்தித்தே ஆக வேண்டும்.
தேவையில்லாததை அவர் பேசியுள்ளார். ஜனநாயகம் தெரிந்தவர்கள் அப்படிப் பேச மாட்டார்கள்.
விஜயகாந்த் ரசிகர் மன்றத்தினர் போராட்டம் நடத்தினால், பாமகவினரும் எதிர் போராட்டம் நடத்துவார்கள்.அதற்கு நானே தலைமை தாங்கிச் செல்வேன் என்றார் தன்ராஜ்.












Click it and Unblock the Notifications