பேச்சுவார்த்தைக்கு தயார்: பாமக அறிவிப்பு
சென்னை:
விஜயகாந்துடனான மோதல் காரணமாக திரைப்படத் துறையினர் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக யாருடனும்பேச்சுவார்த்தை நடத்த பாமக நிறுவனர் ராமதாஸ் தயாராக இருப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பாமக பொதுச் செயலர் மூக்கையா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
பாமகவோ, ராமதாஸோ திரைப்படத் துறையினருக்கு எந்த வகையிலும் எதிரி அல்ல. ஆனால் இளைஞர்களைசீரழிக்கும் கருவியாக சினிமா மாறக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
சினிமா நடிகர்களை ரசிக்கலாம்; ஆனால் பூஜிக்க வேண்டுமா என்றுதான் இளைஞர்களை ராமதாஸ் கேட்கிறார்.மும்பை போன்ற நகரங்களில் அரசியல் தலைவரைப் பற்றி தாறுமாறாகப் பேசினால் என்ன நடக்கும் என்பதுசினிமாத் துறையினருக்குத் தெரியாததல்ல.
யாரோ ஒருவர் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்று விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் பேசுகிறார்கள்.சிலரின் தனிப்பட்ட கருத்துகள் பாமக தொண்டர்களின் மனதை புண்படுத்துவதை அவர்கள் ஏன்கண்டிக்கவில்லை?
தமிழ்த் திரைப்படத் தொழில் நசிந்துவிடக்கூடாது என்பதில் அதிக அக்கறையுள்ளவர் ராமதாஸ்.
எனவே சிலரின் தனிப்பட்ட கருத்துகளால் திரைப்படத் தொழில் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக யாரோடும்வெளிப்படையாகப் பேச்சுவார்த்தை நடத்த ராமதாஸ் தயாராகவே இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications