ராமதாஸுக்கு ஃபெப்சி கோரிக்கை
சென்னை:
லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட திரைப்படத் துறைக்கு பாதகம் ஏற்படும் வகையில்பாட்டாளி மக்கள் கட்சி நடந்துகொள்ளக் கூடாது என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கு தென்னிந்தியதிரைப்பட ஊழியர்கள் சம்மேளனம் (ஃபெப்சி) கோரிக்கை விடுத்துள்ளது.
ஃபெப்சி அமைப்பின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்திற்குப் பின் ராமதாஸுக்குக்கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அந்த கடிதத்தின் நகலில் கூறப்பட்டுள்ளதாவது:
ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் படத்தை வெளியிடுவது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி பிரச்சினைகள்செய்தது. தற்போது நடிகர் விஜயகாந்த்தின் படங்களை தடை செய்வோம் என பாமக கூறியுள்ளது அதிர்ச்சிதருகிறது.
உங்களது மிரட்டல்களினால், திரைப்படத் துறையைச் சேர்ந்த அனைத்துப் பிரிவினரும் கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே தமிழ் திரைப்படத் துறை தடுமாற்றத்தில் உள்ளது. திருட்டு விசிடி, டிவிடி, படப்பிடிப்புகள் வெளிமாநிலங்களுக்கு போய் விட்டது என பல பிரச்சினைகளினால் தமிழ்த் திரையுலகம் தத்தளித்து வருகிறது.
இந் நிலையில் பாமகவின் நடவடிக்கை, லட்சக்கணக்கான குடும்பங்கள் ஈடுபட்டுள்ள திரைப்படத் துறையின்அழிவுக்கே வித்திடும். எனவே நடிகர்களுக்கு எதிரான போக்கு, திரைப்படங்களைத் தடுப்பது போன்றசெயல்களிலிருந்து பாமகவினர் விலகியிருக்க வேண்டும் என்று அதில் கோரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications