ஒலிம்பிக் கலந்து கொள்வேன்: - தன்ராஜ் நம்பிக்கை
லண்டன்:
நான்காவது முறையாக ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வேன் என்று இந்திய ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளைநம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய உத்தேச அணியில் தன்ராஜ் முதலில் இடம்பெறவில்லை. பின்னர் வைகோஉள்ளிட்ட அரசியல் தலைவர்கள், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று அணியில்சேர்க்கப்பட்டார்.
இந்திய உத்தேச அணியினர் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பயிற்சி ஆட்டங்களில் விளையாடிவருகின்றனர். இந் நிலையில் தன்ராஜ் பிள்ளை லண்டனில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
ஒலிம்பிக் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. 100 சதவீதம் உடல் தகுதியுடன்உள்ளேன். அமெரிக்காவில் மேற்கொண்ட பயிற்சி மூலம் பயிற்சி மூலம் உடல்திறனும், வேகமும் அதிகரித்துள்ளது.எவ்வளவு காலம் உடல்தகுதியுடன் இருக்கிறேனோ அதுவரை விளையாடுவேன்.
ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் இந்தியா நிச்சயம் அரையிறுதியில் விளையாடும். கடந்த 2 ஒலிம்பிக் போட்டிகளிலும்பதக்கத்துக்கு அருகில் வந்து தோற்றுவிட்டோம். இம்முறை சிறப்பாக விளையாடி வெற்றி பெறுவோம் எனநம்புகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications