கிரிக்கெட் வீரர்களுக்கு ஐசிசி ஆஸ்கர் விருது
டெல்லி:
சினிமா துறைக்கு ஆஸ்கர் விருதைப் போல, சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு மிக உயரிய விருது வழங்கும் திட்டத்தை சர்வதேசகிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அறிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கும், சிறந்த அணிக்கும் வருடந்தோறும் இந்த விருதுகள்வழங்கப்படும். அணித் தலைவர்கள், நடுவர்கள், அம்பயர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஆகியோர் அடங்கிய 50 பேர்கொண்ட குழு விருதுக்குரியவர்களைத் தேர்வு செய்யும்.
ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த டெஸ்ட் வீரர், சிறந்த ஒருநாள் வீரர், சிறந்த அறிமுக வீரர், சிறந்த டெஸ்ட் அணி, சிறந்தஒருநாள் அணி, சிறந்த அம்பயர் ஆகிய பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும்.
இதை செய்தியாளர்களிடம் தெரிவித்த ஐ.சி.சி. நடுவரும், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் தலைவருமான கிளைவ்லாயிட்,
இந்த வருடத்துக்கான விருதுகள் வரும் செப்டம்பர் மாதம் 7ம் தேதி லண்டனில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும். கடந்தவருடம் ஆகஸ்டு 1ம் தேதி முதல் இந்த வருடம் ஜூலை 31ம் தேதி வரை நடைபெற்ற ஆட்டங்களை கணக்கில் கொண்டுவிருதுகள் அறிவிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications