பலத்த பாதுகாப்புடன் இன்று கண்டதேவி தேரோட்டம்

Subscribe to Oneindia Tamil

தேவகோட்டை:

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி அருள்மிகு சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் இன்றுமிக பலத்த பாதுகாப்புடன் நடக்கவுள்ளது.

கண்டதேவி கோவில் தேரோட்டத்தில் தலித் சமுதாயத்தினர் கலந்து கொள்ள கள்ளர் சமூகத்தினர் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.

தாங்களும் தேரின் வடம் பிடித்து இழுக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என தலித் மக்கள் போராடி வருவதால், பலத்த பதற்றம்ஏற்பட்டு, கடந்த சில ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை.

ஒரு முறை துப்பாக்கிச் சூடு நடக்கும் அளவுக்கு கலவரம் வெடித்தது. இந் நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில்அமைக்கப்பட்ட அமைதிக் குழுவினர் இந்த ஆண்டு கோவில் திருவிழா தொடர்பாக இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்திஉடன்பாடு கண்டனர்.

இதைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்றுநடக்கிறது.

இதையொட்டி அங்கு மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கண்டதேவி முழுவதும் ஆயுதம் தாங்கிய போலீஸார்பாதுகாப்பு நிறுத்தப்பட்டுள்ளனர். மொத்தம் 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பக்தர்களைக் கண்காணிக்க பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. எந்தவித அசம்பாவிதசம்பவும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு போலீஸார் உஷார் நிலையில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+