சிபிஐ நீதிமன்றத்தில் காளிமுத்து ஆஜராக உத்தரவு
சென்னை:
வங்கிகளில் பல கோடி கடன் மோசடி செய்ததாக தொடரப்பட்ட ராபின் மொயின் வழக்கில் சபாநாயகர் காளிமுத்து ஜூலை 20ம் தேதிசிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1984ம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த ராபின் மொயின் என்பவர் பல்வேறு வங்கிகளில் போலியான ஆவணங்களைக் கொடுத்து பலகோடி அளவுக்கு கடன் வாங்கினார். இதை அவர் திரும்பத் தராததால் அவர் மீது வங்கிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
பின்னர் இந்த வழக்கை சிபிஐ ஏற்றது. அப்போது அமைச்சராக இருந்த காளித்துவுக்கும் இந்த மோசடியில் தொடர்பு உள்ளதாககூறப்பட்டதால் அவரும் ஒரு முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணைக்கு அவர் நேரில் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம்உத்தரவிட்டது.
இந் நிலையில் ஜூன் 30ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு பெற்றார் காளிமுத்து.
இன்று சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காளிமுத்து வரும் 20ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவேண்டும் என்று நீதிபதி ராமசாமி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications