கருணாநிதியுடன் சென்னை வழக்கறிஞர்கள் சந்திப்பு
சென்னை:
மதுரை உயர் நீதிமன்றக் கிளை எல்லைப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண உதவுமாறு திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து சென்னைஉயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரையில் அமையவுள்ள உயர்நீதிமன்றக் கிளைக்கு அதிக மாவட்டங்களை ஒதுக்கக் கூடாது என்று சொல்லி சென்னை உயர் நீதிமன்றவழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பதிலுக்கு மதுரை வழக்கறிஞர்களும் போராட்டம் நடத்துகின்றனர்.
இந் நிலையில் இப்பிரச்சினையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் பெருமை பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளுமாறு கோரி தலைமைநீதிபதி சுபாஷன் ரெட்டியை அணுகினர் சென்னை வழக்கறிஞர்கள்.
ஆனால் இதில் தான் தலையிட முடியாது என்று சுபாஷன் ரெட்டி திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.
இந் நிலையில், கருணாநிதியை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பிரபாகரன் தலைமையிலான குழுவினர்சந்தித்தனர்.
பின்னர் பிரபாகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களது கோரிக்கையை பரிசீலித்து சுமூக தீர்வு ஏற்பட முயற்சிப்பதாக கருணாநிதிதெரிவித்தார். இதேபோல, முதல்வர் ஜெயலலிதா, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோரையும் சந்தித்து கோரிக்கை விடுக்கவுள்ளோம்என்றார்.
மத்திய சட்டத்துறை இணையமைச்சராக திமுகவைச் சேர்ந்த வேங்கடபதி இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications