பொடாவை உடனே ரத்து செய்ய திமுக கோரிக்கை
டெல்லி:
பொடா சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என மத்திய சட்டத்துறை இணையமைச்சர் வேங்கடபதிகூறினார்.
திமுகவைச் சேர்ந்த வேங்கடபதி கூறுகையில்,
வரும் அக்டோபர் மாதத்துடன் பொடாவின் ஆயுட் காலம் தானாகவே முடிவுக்கு வந்துவிடும். ஆனாலும்அதுவரை இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இதனால் அதனை உடனே ரத்து செய்வது மிகஅவசியம்.
தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்துவதற்காக என்று சொல்லித் தான் இந்தச் சட்டத்தை பா.ஜ.க. அரசு கொண்டு வந்தது.அதைத் தவறாக பயன்படுத்த விடமாட்டோம் என அப்போதைய துணைப் பிரதமர் அத்வானி கூறினார்.
ஆனால், இந்தச் சட்டம் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் அரசியல் எதிரிகளுக்கு எதிராக ஆட்சியாளர்களால்பயன்படுத்தப்பட்டபோது, அதை வாய்மூடி பார்த்துக் கொண்டிருந்தது பா.ஜ.க. அரசு.
மதிமுக தலைவர் வைகோவை முதல்வர் ஜெயலலிதா இந்தச் சட்டத்தை வைத்து எப்படியெல்லாம் வதைத்தார்என்பது உலகறிந்தது. இதனால் இச் சட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றார்.
பொடாவைத் திரும்பப் பெறுவதில் மத்திய அரசு மெத்தனம் காட்டி வருவதாக திமுக கருதுகிறது. இதனால் தான்வேங்கடபதி மூலமாக இந்த விவகாரத்தை திமுக கிளறுவதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications