ஆகஸ்டில் தான் கும்பாபிஷேகம்: அரசு அறிவிப்பு
சென்னை:
ஜோதிடரின் அறிவுரைப்படி நிறுத்தப்பட்ட 16 கோவில்களின் கும்பாபிஷேகத்தை நடத்த தமிழக அரசு இன்றுஅனுமதியளித்துள்ளது. ஆனால், அதை ஆகஸ்ட் 22ம் தேதி நடத்துமாறு அரசு கூறியுள்ளது.
அதே நேரத்தில் மேலும் 5 கோவில்களுக்கான கும்பாபிஷேகத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடத்துமாறுஉத்தரவிட்டுள்ளது.
இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுஅதற்கான ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டன. இந் நிலையில் இந்த கும்பாபிஷேகங்களை தமிழக அரசுதிடீரென நிறுத்தி வைத்தது.
இப்போது முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேரம் சரியில்லை என்றும், கும்பாபிஷேகங்கள் நடந்தால் அது ஆட்சிக்குஉலை வைக்கும் என்றும் போயஸ் கார்டனின் ஆஸ்தான ஜோதிடர் அறிவுறுத்தியதால் அவை ஒத்திவைக்கட்டதாகத் தெரிகிறது.
இதற்கு இந்து முன்னணி உள்பட பல்வேறு அமைப்புகளிடம் இருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது. இதையடுத்துஅவர்களை அமைதிப்படுத்தும் வகையில் 11 கோவில்களுக்கான கும்பாபிஷேகத்துக்கான நாளை அரசுஅறிவித்துள்ளது.
ஆனால், இந்த கும்பாபிஷேகங்கள் உடனடியாக நடைபெறப் போவதில்லை. வரும் ஆகஸ்ட் மாதம் 22ம் தேதிதான் நடத்தப்படவுள்ளன.
குளங்கள் தூர் வாரும் பணி உள்ளிட்ட பல வேலைகள் முடிவடையாமல் இருப்பதாகவும், அதற்கு போதிய காலஅவகாசம் தந்து ஆகஸ்டில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இன்று அறநிலையத்துறைவெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகத்துக்கு கோவில்கள் தயார் நிலையில் இருக்க, முதல்வரின் நல்ல நேரத்துக்காக, அதை மேலும்இரண்டு மாதங்களுக்கு அரசு தள்ளி வைத்துள்ளது பக்தர்களை எந்த அளவுக்கு அமைதிப்படுத்தும் என்றுதெரியவில்லை.












Click it and Unblock the Notifications