கோபால்: பொடா குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவு
டெல்லி:
நக்கீரன் கோபால் மீதான பொடா வழக்கு குறித்து ஒரு மாதத்துக்குள் முடிவெடுக்குமாறு பொடா மறுஆய்வுக் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கோபால் ஆகியோர் மீது தொடரப்பட்ட பொடா வழக்குசெல்லுமா என்பது குறித்து பொடா மறு ஆய்வுக் குழு விசாரணை நடத்தி வந்தது.
இதில் வைகோ மீதான வழக்கு செல்லாது என்று அறிவித்த மறு ஆய்வுக் குழு, அந்த வழக்கைவாபஸ் பெறுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை தமிழக அரசு இன்னும்நிறைவேற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் வைகோ மீதான வழக்கு பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் நிலுவையிலேயே இருந்துவருகிறது. இன்றும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையை நீதிபதி மீண்டும்ஒத்தி வைத்தார்.
இந் நிலையில் நக்கீரன் மீதான பொடா வழக்கு செல்லுமா இல்லையா என்று இதுவரைமுடிவெடுக்காமல் இருந்து வருகிறது பொடா மறு ஆய்வுக் குழு.
இதற்கிடையே பொடா வழக்கில் கோபாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி தமிழகஅரசு தாக்கல் செய்த மனு மீது இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
இதனை விசாரித்த தலைமை நீதிபதி லஹோத்தி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட டிவிசன்பெஞ்ச், கோபால் மீதான வழக்கு குறித்து 4 வாரங்களுக்கு முடிவெடுக்குமாறு பொடா மறு ஆய்வுக்குழுவுக்கு உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications