புதிய தலைமை செயலகம்: ராஜா போடும் தடை
டெல்லி:
ஒரு நாளைக்கு 10,000 லிட்டர் கழிவு நீரை வெளியேற்றும் கட்டடங்கள் கட்ட மத்திய அரசின்அனுமதியைப் பெற வேண்டும் என மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரப்பூர்வ அறிவிப்புவெளியிட்டுள்ளது.
இதனால் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பிரம்மாண்டான தலைமைச் செயலகம்கட்டும் முதல்வர் ஜெயலலிதாவின் திட்டத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.
ரூ. 50 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்படும் கட்டடங்கள், 1,000 பேருக்கு மேல்பணியாற்றும் கட்டடங்கள் ஆகியவற்றைக் கட்ட சுற்றுச்சூழல் துறையின் அனுமதி அவசியம் எனஇந்த அறிவிப்பில் திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த விதி இம் மாதம் 7ம் தேதி முதல் அமலுக்கு வந்துவிட்டதாகவும் சுற்றுச்சூழல்அறிவித்துள்ளது.
ஏற்கனவே, இந்த விதியை கடந்த ஆட்சியில் திமுகவைச் சேர்ந்த டி.ஆர். பாலு மத்திய சுற்றுச்சூழல்அமைச்சராக இருந்தபோதே கொண்டு வந்துவிட்டார். அப்போதே ஒரு வரைவு அறிக்கையையும்வெளியிட்டார்.
இப்போது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்போது இந்தத் துறைதிமுகவைச் சேர்ந்த ஆர்.ராஜாவின் வசம் உள்ளது.
சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெற்ற பிறகே தலைமைச் செயலகத் திட்டத்தைத் தொடங்கலாம்என்ற நிலையில், அந்த அனுமதியைப் பெறாமலேயே ரூ. 500 கோடியில் கட்டடம் கட்டடெண்டர்களை வெளியிட்ட தமிழக அரசு.
இந் நிலையில் தமிழக அரசுக்கு மறைமுக எச்சரிக்கையாக இந்த அறிவிப்பை சுற்றுச்சூழல் துறைவெளியிட்டுள்ளது.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றம் தந்த வழிகாட்டுதலின்பேரில் இந்த அறிவிப்புவெளியிடப்படுவதாக சுற்றுச்சூழல் துறை கூறியுள்ளது.
இதனால் டெண்டர்களை முடிவு செய்து கட்டடம் கட்டும் பணியில் தமிழக அரசு இறங்கினால், சட்டச்சிக்கல்களை சந்திக்க நேரிடலாம்.
அண்ணா அறிவாலயத்தில் மாநகராட்சி விதிப்படி 10 சதவீத நிலத்தை பொது உபயோகத்துக்குவிடாமல் கட்டடம் கட்டியதாக திமுகவுக்கு தமிழக அரசு நெருக்கடி தர ஆரம்பித்துள்ள நிலையில்,தலைமைச் செயலகத்துக்கு செக் வைக்கும் அறிவிப்பை ராஜா வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications