போலீஸ் தடையை உடைத்த தாமரைக்கனி!
சென்னை:
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சித் தலைவர் தாமரைக்கனி, 10ம் தேதி அங்குள்ள காமராஜர் சிலை அருகேஉண்ணாவிரதம் இருக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் நிலவும் தண்ணீர்ப் பிரச்சினையை தீர்க்கக் கோரி அனைத்துக் கட்சி கவுன்சிலர்களுடன் சேர்ந்துஉண்ணாவிரதம் இருக்கப் போவதாக தாமரைக்கனி அறிவித்திருந்தார்.
இதுதொடர்பான சுவரொட்டிகளில் அவரது மகனும், அதிமுக அமைச்சருமான இன்பத் தமிழனின் பெயரையும்சேர்த்து அச்சிட்டிருந்தார் தாமரைக்கனி.
இதனால் கடுப்பான இன்பத் தமிழன் கோபமடைந்து தாமரைக்கனியை கண்டித்து அறிக்கை விட்டார். அத்தோடுபோலீஸ் உதவியுடன் தந்தை மீது ஜாமீனில் வெளி வரமுடியாத பிரிவுகளில் வழக்குகளை பதிவு செய்ய வைத்தார்.
இந் நிலையில் தாமரைக்கனி உண்ணாவிரதம் இருக்க டி.எஸ்.பி. அனுமதி மறுத்தார். இதை எதிர்த்து தாமரைக்கனிஉயர் நீதிமன்றத்தில் மனு செய்தார்.
அதில், ஜூலை 10ம் தேதி ஆதி கோவில் ஆனைத்தலையாறு குடிநீர் திட்டத்தை அமல்படுத்தக் கோரி தமிழகஅரசை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம். இதற்கு டிஎஸ்பி அனுமதி மறுத்துள்ளார். அந்தஉத்தரவை ரத்து செய்து உண்ணாவிரதம் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியம், ஜூலை 10-ம்தேதி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை,ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம் காமராஜர் சிலை அருகே உண்ணாவிரதம் இருக்கலாம்.
உண்ணாவிரதத்தில் பங்கேற்போர் யார், யார் என்ற பட்டியலை உண்ணாவிரதத்திற்கு முன்பே போலீசாரிடம்தாமரைக்கனி கொடுக்க வேண்டும்.
இந்தப் பட்டியலில் உள்ள பெயர்களை டிஎஸ்பி பரிசீலித்து, அதில் உள்ளவர்களை உண்ணாவிரதத்தில் பங்கேற்கஅனுமதிக்கலாம் என்றார் நீதிபதி.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications