தலித்கள் புறக்கணிப்பு: கிருஷ்ணசாமி எச்சரிக்கை
சென்னை:
சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்ட விழாவில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள்புறக்கணிக்கப்பட்டதால் அதை கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக புதிய தமிழகம் கட்சியின் பொதுச்செயலாளர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கண்டதேவி தேரோட்ட விழாவில் தாழ்த்தப்பட்டசமுதாயத்தினரும் பங்கேற்க வேண்டும் என்று 1998ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.ஆனால் சட்டம், ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டி 98ம் ஆண்டு முதல் தேரோட்ட விழாவை அரசுநடத்தவில்லை.
இந்த ஆண்டு பலத்த பாதுகாப்புடன் தேரோட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இருப்பினும் தாழ்த்தப்பட்டசமுதாயத்தினரை விழாவில் பங்கேற்க விடாமல் செய்து விட்டனர். விழாவில் தாழ்த்தப்பட்டவர்களும் பங்கேற்கும்வகையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யத் தவறி விட்டனர் காவல்துறையினர்.
இதைக் கண்டித்து,தேசிய அளவில் பெரும் பிரச்சினையாக எழுப்ப புதிய தமிழகம் முடிவு செய்துள்ளது என்றார்அவர்.












Click it and Unblock the Notifications