மேலும் ஒரு அரவாணிக்கு அரசு வேலை
சென்னை:
மேலும் ஒரு அரவாணிக்கு தமிழக அரசு வேலை வாய்ப்பு அளித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாரதி என்ற அரவாணியை தன்னார்வ தொண்டு நிறுவன பயிற்சி மையத்தில்அலுவலக உதவியாளராக தமிழக அரசு நியமித்தது.
இந் நிலையில் தமிழக அரசு மீண்டும் ஒரு அரவாணிக்கு வேலை வழங்கி உள்ளது. காஞ்சீபுரம் மாவட்டம்உத்திரமேரூரை சேர்ந்த டயானா (32) என்ற அரவாணி ஒப்பந்த அடிப்படையில் கிண்டியில் உள்ள தமிழ்நாடுமகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தில் செயல்பட உள்ள உலக வங்கி திட்ட பிரிவில் உதவியாளராகநியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு மாதம் ரூ.3,000 சம்பளம் வழங்கப்படுகிறது. டயானா அலுவலக வேலையை ஆர்வமுடன் செய்துவருவதாகவும், கம்ப்யூட்டரை நல்ல முறையில் இயக்குவதாகவும் சக ஊழியர்கள் தெரிவித்தனர். டயானா இதுபற்றிகூறும்போது, இந்த வேலையால் என் போன்ற அரவாணிகளுக்கு அங்கீகாரம் கிடைத்து இருப்பதாகத்தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications