முத்திரை தாள்: இரு அச்சக அதிபர்கள் தலைமறைவு
சிவகாசி:
போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த மேலும் ஒரு சிபிஐ குழு விரைவில்தமிழகம் வரவிருக்கிறது.
இதற்கிடையே சிவகாசியைச் சேர்ந்த மேலும் 2 அச்சக உரிமையாளர்களுக்கும் இந்த மோசடியில் தொடர்புஉள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்களைக் கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில்இறங்கியுள்ளனர். ஆனால், அவர்கள் தலைமறைவாகியுள்ளனர்.
போலி முத்திரைத் தாள் மோசடியில் இதுவரை டிஐஜி முகம்மது அலி, உதவி ஆணையர் சங்கர், எல்.ஐ.சிஅதிகாரி ராமசாமி சாது, சிவகாசி அச்சக அதிபர் மெகபூப் ஜான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடைசியாக கைது செய்யப்பட்ட மெகபூப் ஜானிடம் சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணையில், நிஜாமுதீனுக்குஅவர்தான் போலி முத்திரைத் தாள்களை அச்சடித்துக் கொடுத்தது தெரிய வந்தது. மேலும், அவருக்கு பிலால்மற்றும் சர்தார் ஆகிய இருவரும் உதவியதாகவும் தெரிய வந்தது.
பிலால் மற்றும் சர்தார் ஆகிய இருவரும் சிவகாசியைச் சேர்ந்தவர்கள்தான். அவர்களும் அச்சகத் தொழிலில்தான்ஈடுபட்டு வந்தனர். மெகபூப் ஜான் கொடுத்த தகவல்களின் அடிப்படையில், தலைமறைவாகி விட்ட இவர்கள்இருவரையும் கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications