அரசு ஊழியர் அட்டகாசம்; ஊழியைகள் ஓட்டம் !
சென்னை:
சென்னை அரசு அலுவலகத்தில், ஆண் ஊழியர் ஒருவர், சக ஊழியைகளை கட்டிப் பிடித்து முத்தமிட முயன்றதால்அலுவலகத்தில் இருந்த பெண் ஊழியைகள் பதறியடித்து ஓடினர்.
சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் அலுவலக வளாகத்தில் ஓய்வூதியத் துறை அலுவலகம் உள்ளது. இங்குபணியாற்றி வரும் மோகன் என்ற ஊழியர், திடீரென தனது பிரிவில் பணியாற்றி வரும் சில பெண் ஊழியைகளைகட்டிப் பிடித்து முத்தமிட முயன்றுள்ளார்.
இதனால் அவர்கள் பதறிப் போய் அங்கிருந்து ஓடினர். இதனால் அலுவலகத்தில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. பிறஆண் ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து மோகனைப் பிடித்தனர்.
சம்பவம் குறித்து போலீஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் வருவதற்குள் மோகன் அங்கிருந்துஓடி விட்டார். இதுதொடர்பாக போலீஸார் மோகன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மோகம் கொண்டு முத்தமிடமுயன்ற மோகன் தற்போது தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.