அறிவாலய நிலத்தை பூங்காவாக்க மாநகராட்சி முடிவு
சென்னை:
சென்னை அண்ணா சாலையில் உள்ள திமுக தலையைகமான அண்ணா அறிவாலயத்தின் முன்புறம் உள்ளசர்ச்சைக்கிடமான இடத்தைக் கைப்பற்றி அங்கு முழுமையான பூங்காவை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவுசெய்துள்ளது.
சென்னை மாநகராட்சி விதிமுறைகளின்படி 10,000 சதுர அடிக்கு மேலான கட்டடம் கட்டப்படும்போது, அதற்குமுன்பு குறிப்பிட்ட இடத்தை மாநகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும். அது பொதுவான இடமாகபயன்படுத்தப்படும்.
ஆனால் திமுக தலைமையகான அண்ணா அறிவாலயம் கட்டப்பட்டபோது, விதிமுறைப்படி காலியிடம்மாநகராட்சியிடம் வழங்கப்படவில்லை. அதற்கு மாறாக அந்த இடத்தை தாங்களே பூங்காவாக பராமரிப்பதாகமாநகராட்சியிடம் திமுக அறக்கட்டளை தெரிவித்திருந்தது.
இருப்பினும் அது பூங்காவாக பராமரிக்கப்படவில்லை. மாறாக அங்கு அண்ணா சிலை வைக்கப்பட்டு,திமுகவினரின் வாகன நிறுத்தமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந் நிலையில் சம்பந்தப்பட்ட இடப் பிரச்சினையை சமீபத்திய மாநகராட்சி கூட்டத்தில் அதிமுகவினர் கிளப்பினர்.மேலும் அந்த இடம் குறித்து திமுக அறக்கட்டளைத் தலைவரான திமுக தலைவர் கருணாநிதிக்கு விளக்கம் கேட்டுமாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
தற்போது இந்தப் பிரச்சினையை வேறு விதமாக கையாள மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சர்ச்சைக்குரியஇடத்தைக் கைப்பற்றி அங்கு முழுமையான பூங்கா அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து விடசென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், நகராட்சி நிர்வாக ஆணையர் ஆகியோருக்கு மாநகராட்சிசார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் அண்ணா அறிவாலய வளாகம் உள்ளிட்ட சென்னை நகரில் 3இடங்களில் பூங்காக்கள் நிர்வாகம் மற்றும் மேம்பாட்டு பிரிவின் கீழ் முழுமையான பூங்கா அமைக்க நடவடிக்கைஎடுக்குமாறு கூறப்பட்டுள்ளது.
இதனால் திமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்ணா அறிவாலய வளாகம் அதிரடியாககைப்பற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இதற்கிடையே, சர்ச்சைக்குரிய இடத்தில் தாங்களே முழுமையான பூங்காவை அமைக்க திமுக அறக்கட்டளை முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ஒரு பூங்கா அமைக்கும்நிறுவனத்திடம் திமுக அறக்கட்டளை ஆலோசனை கேட்டுள்ளது.
அம்பத்தூர் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் 2 நாட்களுக்கு முன்பு அறிவாலயம் வந்து சம்பந்தப்பட்ட இடத்தைப்பார்வையிட்டு அங்கு பூங்கா அமைப்பது தொடர்பான திட்டம் குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளர்ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications