மருத்துவ கல்லூரி விவகாரம்: இன்று முடிவு
டெல்லி:
தூத்துக்குடி, கன்னியாகுமாரி மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது, நெல்லை மருத்துவக்கல்லூரிக்கு கூடுதலாக 50 இடங்களை ஒதுக்குவது தொடர்பாக இந்திய மருத்துவக் கவுன்சில் இன்று முடிவுஎடுக்கிறது.
கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டுமாணவர்களைச் (100 இடங்கள்) சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் அங்கீகாரம் அளிக்க மறுத்துவிட்டது.
அதேபோல், கன்னியாகுமரியில் இந்த ஆண்டு புதிய மருத்துவக் கல்லூரியைத் திறக்கவும், திருநெல்வேலி அரசுமருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 50 இடங்கள் ஒதுக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது.
இதற்கான அனுமதியை வழங்க உதவுமாறு திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர்மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணிக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதேபோல் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் டெல்லியில் அன்புமணியைச் சந்தித்து கோரிக்கைவிடுத்தார். இதனையடுத்து, இந்தக் கல்லூரிகளுக்கு விதிக்கப்ப்டட தடை குறித்து மறுபரிசீலனை செய்யுமாறுமருத்துவக் கவுன்சிலுக்கு அன்புமணி கோரிக்கை விடுத்தார்.
இதற்கிடையே இந்த மருத்துவக் கல்லூரிகளில், விதிமுறைகளின்படி உள்கட்டமைப்பு வசதிகள் விரைவில்ஏற்படுத்தித் தரப்படும் என்று தமிழக அரசு உறுதி அளித்தது. இந் நிலையில் இந்திய மருத்துவக் கவுன்சில் இன்றுகூடி இது தொடர்பாக தனது முடிவை அறிவிக்கிறது.












Click it and Unblock the Notifications