நாடாளுமன்றத்தில் அஞ்சலி: பிரதமர் இரங்கல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 77 மாணவிகள் பலியானதற்கு பிரதமர் மன்மோகன் சிங் ஆழ்ந்தஇரங்கல் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் சார்பில் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ள கும்பகோணம்விரையுமாறு மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறனுக்கு பிரதமர்உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து தயாநிதி கும்பகோணம் விரைந்தார்.

முதல்வர் ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மன்மோகன் சிங், தனது ஆழ்ந்தஇரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

நாடாளுமன்றத்தின் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் இந்த சம்பவத்துக்கு இரங்கல்தெரிவித்து, இன்று பிற்பகலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இரு அவைகளிலும் உறுப்பினர்கள்எழுந்து நின்று மறைந்த மாணவ, மாணவிகளுக்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தினர்.

தமிழகத்தின் சோகத்தில் ராஜ்யசபையும் பங்கேற்பதாக அதன் துணைத் தலைவர் பைரோன் சிங்ஷெகாவத் கூறினார்.

மறைந்த குழந்தைகளுக்கு மக்களவையின் சார்பில் அஞ்சலி செலுத்துவதாக தலைவர் சோம்நாத்சாட்டர்ஜி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+