வைகோ வழக்கு: விசாரணைக்கு தடை நீட்டிப்பு
டெல்லி:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீதான பொடா வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உச்சநீதிமன்றம் நீட்டித்துள்ளது.
தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசியதாக வைகோகடந்த 2002ம் ஆண்டு ஜூன் மாதம் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில்அடைக்கப்பட்டார். ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் கழித்த வைகோ, பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.
இதற்கிடையே நீதிபதி சகாரியா தலைமையில் அமைக்கப்பட்ட பொடா மறு ஆய்வுக் குழு வைகோ மீதானவழக்கை பரிசீலித்து, பொடா சட்டத்தின் கீழ் வைகோ மீது வழக்கு தொடர எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லைஎன தீர்ப்பு கூறியது. அதன் அடிப்படையில் பொடா வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறு சென்னைஉயர்நீதிமன்றத்தில் வைகோ மனுத் தாக்கல் செய்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மறு ஆய்வுகுழுவின் சிபாரிசு தமிழக அரசிடம் தெரிவிக்கப்பட்டு விட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
இதனையடுத்து, பொடா வழக்கை தனி நீதி மன்றம் விசாரிக்க கூடாது; வழக்கிலிருந்து தன்னை விடுதலை செய்யதமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி வரியவா, நீதிபதி அரிஜித் பஸ்யாத் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச்,
வைகோ மீதான பொடா வழக்கு விசாரணை நடத்த தடை விதித்தோடு, இந்த மனு தொடர்பாக பதிலளிக்குமாறுதமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications