மத்திய அரசை பகைத்தால்: வாசன் எச்சரிக்கை
சென்னை:
மத்திய அரசை பகைத்துக் கொண்டால் தமிழக மக்களுக்கு ஒரு நல்ல திட்டத்தையும்அமல்படுத்த முடியாது என்று தமிழக அரசுக்கு காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மத்திய அரசுடன் சுமூக உறவைவைத்துக் கொள்ள தமிழக அரசு முயற்சிக்க வேண்டும். மத்திய அரசுடன் பகைமைஉணர்வுடன் நடந்து கொண்டால் தமிழக மக்களுக்கு ஒரு நல்ல திட்டத்தயும் அமல்படுத்தமுடியாது.
மக்களவைத் தேர்தல் தோல்வியை ஜீரணிக்க முடியாமல், உண்மை நிலை தெரியாமல்முதல்வர் ஜெயலலிதா விமர்சித்து வருகிறார். இதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
சட்டசபைக் கூட்டத் தொடரில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் ஒருங்கிணைந்துமக்கள் பிரச்சினைகளை எழுப்பும் என்றார் அவர்.
பின்னர் அவர் கும்பகோணம் புறப்பட்டுச் சென்றார். அங்கு பள்ளி தீவிபத்தில் பலியானமாணவிகளின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறவுள்ளார்.












Click it and Unblock the Notifications