கண்ணீர் விட்டு அழுத ஜெயலலிதா !
கும்பகோணம்:
கும்பகோணம் தீவிபத்தில் காயமடைந்த பச்சிளம் குழந்தைகளைப் பார்வையிட்டு ஆறுதல் கூறிய முதல்வர்ஜெயலலிதா கண்ணீர் விட்டு அழுதார்.
கல் மனதையும் கரைய வைக்கும் அளவுக்கு மிகப் பெரிய கொடூரத்துக்கு ஆளாகியுள்ளது கும்பகோணம். பள்ளிக்கூடத்திற்கு சென்ற ஒன்றுமறியாத அப்பாவிக் குழந்தைகள் கரிக் கட்டைகளாக கிடந்ததைப் பார்த்த அத்தனைபேரும் கதறி அழுதனர்.
கிருஷ்ணா பள்ளிக்கூடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் காயமடைந்த குழந்தைகள் கும்பகோணம் அரசுமருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களை ஜெயலலிதா சந்தித்து ஆறுதல்கூறினார்.
தீயில் வெந்து போய் வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்ததும் அவர் கண்களில்கண்ணீர் வழிந்தது. கண்களைத் துடைத்தவாறே அவர் ஒவ்வொரு குழந்தையையும் பார்த்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வளவு பிள்ளைகள் படித்துள்ள பள்ளிக்கு ஒரே ஒரு குறுகிய வழிமட்டுமே இருந்ததை அறிந்து மிகவும் அதிர்ச்சியுற்றேன். இந்தப் பள்ளிக்கு எப்படி அனுமதி கொடுத்தார்கள்என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
இத்தகைய பள்ளி குறித்து அலட்சியமாக இருந்துள்ள மாவட்ட உதவி கல்வி அதிகாரி, தொடக்கப்பள்ளி கல்விஅதிகாரி, மாவட்ட தலைமை கல்வி அதிகாரி ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளி நிர்வாகிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக் கூடத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும்உத்தரவிட்டுள்ளேன் என்றார் ஜெயலலிதா.
இதேபோல, மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும், திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலினும் காயமடைந்தசிறுவர், சிறுமியரைப் பார்த்து அவர்களது பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினர்.
பிரதமர் மன்மோகன் சிங்கின் இரங்கல் செய்தியை படித்துக் காட்டிய தயாநிதி மாறன், மத்திய அரசு காயமடைந்தசிறுவர், சிறுமியர்களுக்கு உதவ அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்று உறுதியளித்தார்.












Click it and Unblock the Notifications