காயமடைந்த குழந்தைகளுக்கு தலைவர்கள் ஆறுதல்
கும்பகோணம்:
கும்பகோணம் பள்ளிக் கூட தீவிபத்தில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்குழந்தைகளை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் பார்த்து ஆறுதல் தெரிவித்தனர்.
கும்பகோணம் அரசு மருத்துவமனையில் நேற்று காலை முதல் முக்கியத் தலைவர்களின் வருகை அதிக அளவில்இருந்தது. முதலில் முதல்வர் ஜெயலலிதா வந்து பார்த்து கண்ணீர் விட்டார். பின்னர் காங்கிரஸ் தலைவர்ஜி.கே.வாசன் அங்கு வந்து ஆறுதல் கூறினார்.
பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் நல்லகண்ணு, அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பழனிச்சாமி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன், பாமக தலைவர் ஜி.கே.மணி, மத்திய அமைச்சர்கள் தயாநிதிமாறன், பழனிமாணிக்கம், ரகுபதி, மு.க.ஸ்டாலின், முன்னாள் திமுக அமைச்சர் கோ.சி.மணி உள்ளிட்டோரும்அடுத்தடுத்து வந்து ஆறுதல் கூறினர்.
இதுதவிர முன்னாள்பிரதமர் வாஜ்பாய் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொலைபேசியில் ஆறுதலும்,இரங்கலும்தெரிவித்தார். பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாஜக தலைவர்சி.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர், ஆற்காடு நவாப் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல்செய்தி வெளியிட்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications