கல்வி அதிகாரிகளின் அலட்சியமே கோரத்திற்கு காரணம்
சென்னை:
தஞ்சை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியம் காரணமாகவே இத்தனை உயிர்கள் பறிபோக முக்கியக்காரணம் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருநெல்வேலியில் உள்ள ஒரு பள்ளிக் கூடத்தின் மேற்கூரை, கன மழை காரணமாகஇடிந்து விழுந்தது. இதையடுத்து தொடக்கப் பள்ளிகளுக்கான இயக்குநர் அலுவலகம், மாநிலம் முழுவதிலும் உள்ளபள்ளிக்கூடங்களுக்கு சில விதிமுறைகளை வகுத்தது.
இந்த விதிமுறைகள் அனைத்துப் பள்ளிகளிலும் அமல்படுத்தப்படுகின்றனவா என்பதை உறுதி செய்யுமாறுஅனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் இயக்குநரகம் உத்தரவும் பிறப்பித்திருந்தது.
சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி ஆய்வாளர்கள் பள்ளிகளில் சோதனை நடத்தி ஆய்வு செய்யவும், இந்த ஆய்வைமாவட்ட கல்வி அதிகாரிகள் கண்காணித்து வர வேண்டும் என்றும் அந்த உத்தரவில் மிகத் தெளிவாககுறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் இதுபோன்ற ஆய்வு ஒன்று கூட கும்பகோணம் கிருஷ்ணா பள்ளியில் நடந்ததாகத் தெரியவில்லை.கல்வித்துறை அதிகாரிகள் இந்தப் பள்ளிக்கூடத்தை சோதனையிட்டிருந்தால் நிச்சயம் கூரை மாற்றப்பட்டிருக்கும்,இத்தனை உயிர்கள் பலியானது தவிர்க்கப்பட்டிருக்கும் என்று கும்பகோணம் மக்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications