சுடுகாட்டிலும் தத்தளித்த பெற்றோர்கள்
கும்பகோணம்:
இறந்து போன குழந்தைகளின் சடலங்களை அடக்கம் செய்ய கும்பகோணம் சுடுகாட்டுக்கு வந்த பெற்றோர்களும்,உறவினர்களும் அங்கே எந்தவித முன்னேற்பாட்டையும் செய்யாமல் இருந்த நகராட்சியால் மேலும் நொந்தனர்.
கிருஷ்ணா பள்ளிக் கூட விபத்தில் இறந்த குழந்தைகளில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் நேற்று இரவுகும்பகோணம் சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டன. இறந்த குழந்தைகளுடன் பெற்றோர்களும், உறவினர்களும்சுடுகாட்டுக்கு வந்தபோது இரவாகி விட்டது.
ஆனால் சுடுகாட்டில் ஒரே ஒரு விளக்கு மட்டுமே எரிந்து கொண்டிருந்தது. வெட்டியான்கள் யாரையும்காணவில்லை, மண் தோண்டுவதற்கு மண்வெட்டி கூட இல்லை. இதனால் கொதித்துப் போயினர் பெற்றோர்கள்.
காலையிலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்தது தெரிந்தும் நகராட்சி நிர்வாகம் முறையான ஏற்பாடுகளை செய்துவைக்காமல் அலட்சியமாக நடந்து கொண்டதை நினைத்து அவர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.
பின்னர் இருந்த மண் வெட்டிகளை வைத்து தாங்களே குழிதோண்டி தங்களது செல்லக் குழந்தைகளின் உடல்களைகுமுறலுடன் புதைத்து விட்டு அங்கிருந்து அழுதபடி சென்றது காண்போர் நெஞ்சை பதற வைத்தது.












Click it and Unblock the Notifications