ஆசிரியர்கள் அலட்சியத்தால் அதிக உயிர் பலி
கும்பகோணம்:
தீவிபத்து நடந்தபோது, ஆசிரியர்கள் தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில் 3வது மாடியில் இருந்தகுழந்தைகள் குறித்துக் கவலைப்படாமல் தப்பி ஓடி விட்டதால்தான் அதிக உயிர்கள் பலியாக நேரிட்டு விட்டதாகபொதுமக்கள் குமுறுகின்றனர்.
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளியில் நடந்த தீவிபத்தின் கொடுமைகள் இன்னும் மக்களை அதிர்ச்சியிலிருந்து மீளவிடவில்லை. தீவிபத்தின்போது அதை நேரில் பார்த்த சிலர் கொடுத்துள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிக்கும் விதமாகஉள்ளது.
தீவிபத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், பள்ளிக் கூடத்தின் முதல் மாடியில் தீப்பற்றிக் கொண்டதை நான்நேரில் பார்த்தேன். உடனடியாக பள்ளிக் கூடத்திற்கு அருகில் இருந்த வீட்டின் வழியாக பள்ளிக் கூடத்தின் மேல்மாடிக்கு செல்ல முயன்றேன்.
அப்போது முதல் மற்றும் இரண்டாவது மாடியிலிருந்த மாணவிகள் வெளியே ஓடிக் கொண்டிருந்தனர்,அவர்களுடன் சேர்ந்து ஆசிரியர்களும் ஓடினர். அவர்களிடம் 3-வது மாடியில் இருந்த நர்சரி பிள்ளைகள் தப்பிவிட்டார்களா என்று கேட்டபோது, அவர்களும் தப்பி விட்டதாக தெரிவித்து விட்டு அவர்கள் உயிரைக்காப்பாற்றிக் கொள்ள ஓடினர்.
ஆனால் 3-வது மாடியின் சுவரை இடித்து சென்று உள்ளே பார்த்தபோதுதான் 50க்கும் மேற்பட்ட பிள்ளைகள்கரிக்கட்டை போல கருகிக் கிடந்ததைப் பார்த்தோம். எங்களது நெஞ்சே வெடித்து விட்டது என்றார் கண்ணீருடன்.
இதேபோல, முதல் மாடியில் தீவிபத்து ஏற்பட்டவுடன் அதைப் பார்த்து 3வது மாடியிலிருந்து பிள்ளைகள் பயந்துபோய் கூச்சல் போட்டுள்ளனர். ஆனால் அங்கிருந்த ஒரு ஆசிரியை, சாதாரண தீ தான், பயப்படாமல் அமருங்கள்என்று கூறி வெளியேற முயன்ற குழந்தைகளைத் தடுத்து உட்கார வைத்துள்ளார். ஆனால் அவர் சொன்ன அடுத்தசில நிமிடங்களிலேயே அத்தனை பேரும் தீக்கு இரையாகி விட்டனர்.
3வது மாடியிலிருந்து கைப்பற்றப்பட்ட சடலங்கள் அனைத்துமே குழந்தைகளுடையதுதான். இதுவரை ஒருஆசிரியரின் சடலம் கூட கிடைக்கவில்லை என்பது இவர்களது வாதத்தை உண்மையாக்கும் விதத்தில் உள்ளது.
ஆசிரியர்கள் நினைத்திருந்தால் சில குழந்தைகளை நிச்சயம் காப்பாற்றியிருக்க முடியும் என்றும் பொதுமக்கள்குமுறுகிறார்கள்.
-
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஜோதிடம் மூலம் புற்றுநோய் குணமா.. கோவை தவெக பெண் வேட்பாளரின் சர்ச்சை பின்னணி -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்!












Click it and Unblock the Notifications