தமிழ் திரையுலகம் ரூ. 42 லட்சம் நிதியுதவி
சென்னை:
கும்பகோணம் தீவிபத்தில் பலியான குழந்தைகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தமிழ்திரையுலகம் சார்பில் ரூ. 30 லட்சம் நிதி திரட்டப்பட்டுள்ளது. நடிகர் கமல் அதிகபட்சமாக ரூ.12 லட்சம் நிதியுதவிஅளித்துள்ளார்.
கும்பகோணம் தீவிபத்து தொடர்பான இரங்கல் கூட்டத்திற்கு தமிழ் திரையுலகின் பல்வேறு சங்கங்கள் சார்பில்சென்னை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம், பெப்சி கூட்டமைப்புஉள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நடிகர்கள் விஜய்காந்த், சரத்குமார், சத்யராஜ், சிவக்குமார், சூர்யா, அர்ஜூன், செந்தில், ராஜேஷ்,சிபிராஜ், ரமேஷ் கண்ணா,தியாகு, செந்தில், நடிகைகள் ஸ்ரீபிரியா, சச்சு, மனோரமா உள்ளிட்டோரும்,இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், சேரன் உள்ளிட்டோரும், தயாரிப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நடிகர்கள் விஜய்காந்த், சரத்குமார் ஆகியோர் பேசுகையில் கண்களில் நீர் தளும்ப பேசினர். நடிகைமனோரமா வாய் விட்டு அழுதார். மற்றவர்களும் கண்களில் நீர் மல்கப் பேசினர்.
நிகழ்ச்சியில் நடிகர் சரத்குமார் இதுபோன்ற சம்பவங்களில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு உதவ நிதியம்ஏற்படுத்த வேண்டும் என்று திரையுலகைக் கேட்டுக் கொண்டார். அதற்காக ஒவ்வொரு படத்தின்போதும் ரூ. 5லட்சம் தருவதாகவும் உறுதியளித்தார்.
பின்னர் நடிகர், நடிகையர், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், கும்பகோணம் விபத்தில் இறந்தவர்களின்குடும்பங்களுக்கு உதவ நிதியுதவி அளிப்பதாக அறிவித்தனர். சத்யராஜ் ரூ. 1 லட்சம், சிவக்குமார்-சூர்யா ரூ. 2லட்சம், அர்ஜூன் ரூ. 1 லட்சம், பாரதிராஜா ரூ. 25,000, சேரன் ரூ. 3.24 லட்சம், தயாரிப்பாளர் சங்கம் ரூ. 10 லட்சம்,எஸ்.ஏ.சந்திரசேகர் ரூ. 1 லட்சம், நெப்போலியன் ரூ. 1லட்சம்;
ஆர்.பி.செளத்ரி ரூ. 25,000, பி.வாசு ரூ. 25,000, கே.எஸ்.ரவிக்குார் ரூ. 1 லட்சம், ஆர்.சுந்தரராஜன் ரூ. 10,000,அலெக்ஸ் ரூ. 20,000 என பலரும் நிதியளித்தனர். மொத்தமாக ரூ. 30 லட்சம் திரட்டப்பட்டது.
இந்த நிதி முதல்வர் பொது நிவாரண நிதியில் சேர்க்கப்பட்டு அதன் மூலம் கும்பகோணம் தீவிபத்தில் பாதிக்கப்பட்டகுடும்பங்களுக்கு வழங்கப்படும் என பின்னர் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே தென்கொரிய பயணம் மேற்கொண்டிருக்கும் நடிகர் கமல், விபத்து குறித்து அறிந்து ரூ.12 லட்சம்நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார்.