மதுரை கிளைக்கு ரிட் அதிகாரம் கிடையாது
மதுரை:
மதுரையில் அமைக்கப்பட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற கிளைக்கு தற்போதைக்கு ரிட் மனுக்களை விசாரிக்கும்அதிகாரம் வழங்கப்பட மாட்டாது என மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் வேங்கடபதி கூறியுள்ளார்.
மதுரை உயர்நீதிமன்றக் கிளையை இன்று வேங்கடபதி சுற்றிப் பார்த்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர்பேசுகையில், மதுரை கிளைக்கு ரிட் மனுக்களை விசாரிக்கும் அதிகாரம் வழங்குவதில் சில சிக்கல்கள் உள்ளன.எனவே தற்போதைக்கு மதுரை கிளைக்கு ரிட் மனு அதிகாரம் வழங்கப்பட மாட்டாது. உரிய நேரத்தில் ரிட்அதிகாரம் வழங்கப்படும்.
இந்தியாவிலேயே அழகுற அமைக்கப்பட்டுள்ள உயர்நீதிமன்றம் மதுரை கிளை மட்டும்தான்.
மதுரை கிளைக்கு மாவட்டங்களை ஒதுக்கும் பிரச்சினை வழக்கறிஞர்களின் பிரச்சினை அல்ல, அது மக்களின்பிரச்சினை. இதுதொடர்பாக அமைக்கப்பட்டுள்ள 9 நீதிபதிகளின் குழுவின் பரிந்துரையை அனைத்துததரப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications