பள்ளி வளாகத்தில் நினைவு பூங்கா: ஆட்சியர்
கும்பகோணம்:
கும்பகோணத்தில் தீவிபத்து நடந்த கிருஷ்ணா பள்ளி வளாகத்தில் நினைவுப் பூங்கா அமைப்பது தொடர்பாகதமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்படவுள்ளதாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன்தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் இன்று கிருஷ்ணா பள்ளி வளாகம் அருகே 90 குழந்தைகளின் நினைவாக அஞ்சலிக் கூட்டம்நடந்தது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கிருஷ்ணா பள்ளிவளாகத்தில் நினைவுப் பூங்கா அமைக்கப்பட வேண்டும் என்று கும்பகோணத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள்கருத்து தெரிவித்துள்ளன.
இதேபோன்ற கருத்துடன் பல வெளிநாட்டு அமைப்புகளும் என்னைத் தொடர்பு கொண்ட வண்ணம் உள்ளன.இந்த கருத்துக்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, இதுதொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்துதமிழக அரசுக்குப் பரிந்துரைத்து ஆவண செய்யப்படும் என்றார்.
பின்னர் ஆட்சித் தலைவர் ராதாகிருஷ்ணனும் மற்ற அதிகாரிகளும் குழந்தைகளைப் பறிகொடுத்த பெற்றோர்களைசந்தித்து ஆறுதல் கூறினர்.