திமுக எம்.பிக்கு மக்களவை சபாநாயகர் கண்டனம்
டெல்லி:
மக்களவையில் திமுக எம்.பி. சுகவனம் ஆங்கிலத்தில் எழுதி வைத்த உரையை வாசித்தார். அதற்கு சபாநாயகர்,தமிழிலில் பேசுங்கள் அல்லது ஆங்கிலத்தில் பேசுங்கள், எழுதி வைத்து வாசிக்காதீர்கள்" என்று கண்டித்தார்.
பட்ஜெட் மீது நடந்த விவாதத்தில் சுகவனம் கலந்து கொண்டு, தமிழை செம்மொழி ஆக்கியதற்கு நன்றி தெரிவித்து,தான் எழுதிக் கொண்டு வந்திருந்த ஆங்கில உரையை வாசித்தார்.
அப்போது சபாநாயகர் பொறுப்பில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் வர்க்கலா ராதாகிருஷ்ணன்குறுக்கிட்டு,
நீங்கள் முதன் முறையாக அவையில் பேசுவதால் நீங்கள் ஆங்கில உரையை வாசிப்பதை அனுமதிக்கிறேன். அடுத்தமுறை பேசும்போது தமிழில் பேசுங்கள் அல்லது ஆங்கிலத்தில் பேசுங்கள். தயாரிக்கப்பட்ட உரையை கொண்டுவந்து வாசிக்காதீர்கள் என்று எச்சரித்தார்.
பின்னர் தொடர்ந்து தனது ஆங்கில உரையை வாசித்து முடித்தார் சுகவனம். தனது உரையை, இதனை இதனால்இவன் முடிப்பான் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல் என்ற திருக்குறளை கூறி முடிவு செய்தார்.