தொடர் கொள்ளைகள்: இளம் பெண் கொலை
சென்னை - ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்பதூரில் நேற்று நள்ளிரவில் கொள்ளையர்கள் தாக்கி, 17 வயது இளம் பெண்பலியானார். அவரது வீட்டில் 45 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
அதே போல சென்னையில் நேற்று ஒரே நாள் இரவில் 10 இடங்களில் கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளன. இதுபொதுமக்களை மட்டுமல்லாது காவல்துறையையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
ஸ்ரீபெரும்பதூரில் ஜெயச்சந்திரன் என்ற காண்ட்ராக்டரின் வீட்டு காம்பவுண்டுக்குள் நள்ளிரவு 1.45மணிக்கு கொள்ளைக் கும்பல் நுழைந்தது. அப்போது வீட்டின் வெளியே கட்டிப் போடப்பட்டிருந்தநாய் குரைத்தது.
இதையடுத்து ஜெயச்சந்திரன் வீட்டைத் திறந்து கொண்டு வெளியில் வந்தார். அப்போது அந்தக்கும்பல் அவரை உருட்டுக் கட்டைகளால் தாக்கியது. பின்னர் அவரையும் இழுத்துக் கொண்டுவீட்டுக்குள் நுழைந்தது.
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவரது மகள் பவித்ரா (17), மனைவி, மகன் (15), தந்தைஆகியோரை அந்தக் கும்பல் உருட்டுக் கட்டைகளால் மிகக் கடுமையாகத் தாக்கியது.