சட்டசபையை புறக்கணிக்க ஜ.மு.கூட்டணி முடிவு
சென்னை:
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரை 10 நாட்களுக்கு மட்டுமே நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதைக் கண்டித்துகூட்டத் தொடர் முழுவதையும் புறக்கணிப்பதென திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
சட்டசபை செயலாளர் ராஜாராமன் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு திமுகதலைவர் கருணாநிதி, திமுக எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் ஜனநாயக முற்போக்குக்கூட்டணியின் தலைவர்களுடன் அவர் ஆலோசித்தார்.
பின்னர் திமுக பொதுச் செயலாளரும், சட்டசபை திமுக தலைவருமான அன்பழகன் செய்தியாளர்களிடம்பேசுகையில், பட்ஜெட் கூட்டத் தொடரை மிகவும் குறுகிய காலத்தில் நடத்தி முடிக்கத் திட்டமிட்டுள்ளதை நாங்கள்வன்மையாகக் கண்டிக்கிறோம். குறைந்தது 30 நாட்களுக்காவது சபை நடத்தப்பட வேண்டும் என்றுவலியுறுத்தினோம், ஆனால் அதை அவர்கள் ஏற்கவில்லை.
எனவே திமுக உள்ளிட்ட ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் சபைத் தொடரைபுறக்கணிப்பதென ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் இன்று ஒருநாள் மட்டும் கூட்டத்தில் பங்கேற்போம் என்றார் அன்பழகன்.
காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கூறுகையில், வெறும் 8 நாட்கள் மட்டுமே சபையைக்கூட்டியுள்ளனர். இது மிகவும் அநியாயமானது. இதைக் கண்டித்து கோட்டை முன் 23ம் தேதி உண்ணாவிரதம்இருக்க ஜனநாயக முற்போக்குக் கூட்டணி எம்.எல்.ஏக்கள் முடிவு செய்துள்ளனர் என்றார் அவர்.
அவசரம் அவசரமாக சட்டசபைக் கூட்டத்தை முடிப்பதன் மூலம் ஜனநாயகத்தை படுகொலை செய்துள்ளது தமிழகஅரசு என பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
-
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு? -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
பூவை ஜெகன்மூர்த்தி கட்சிக்கு 1 தொகுதியை ஒதுக்கியது அதிமுக! மீண்டும் கே.வி.குப்பத்தில் போட்டி -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ்












Click it and Unblock the Notifications