கனடா துறவியை கற்பழித்த 2 பேர் கைது
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே கனடா நாட்டு புத்த மத துறவியை கற்பழித்த 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கனடா நாட்டைச் சேர்ந்தவர் எரினா ரைடர். இவர் புத்த மத பெண் துறவியாவார். கடந்த 4ம் தேதி இவர்காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தார். மறைமலை நகர் அருகே இவர் பயணித்த இவர் வந்தவாடகைக் கார் திடீரென்று பழுதடைந்தது.
இதனால் நடுச் சாலையில் பரிதவித்துக் கொண்டிருந்த அவரை ஒரு கார் அணுகியது. அதில் இருந்தவர்கள்,தாங்களும் சென்னைக்குத்தான் போவதாகவும், உடன் வருமாறும் கூறி அழைத்துள்ளனர்.
இதை நம்பிய எரினா அந்த காரில் ஏறினார். ஆனால் கார் சென்னை செல்லாமல் படப்பைக்குச் சென்றது. அங்குவைத்து அந்த கனடா நாட்டுப் பெண்ணை, காரில் இருந்தவர்கள் மானபங்கப்படுத்தியுள்ளனர். அவர்கள்தாக்கியதில் அந்தப் பெண் காயம் அடைந்தார்.
வயல் வெளியில் இரவெல்லாம் நினைவிழந்து கிடந்த எரினாவை கிராமத்து மக்கள் காலையில் மீட்டுமருத்துவமனையில் அனுமதித்து விட்டு போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீஸார் விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளுக்குவலை வீசப்பட்டது. இந் நிலையில் ராஜா, மாரியப்பன் என்ற இருவர் பிடிபட்டுள்ளனர். கற்பழிப்புக் கும்பலில்இவர்களும் அடங்குவர் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். இருவரும் கார் டிரைவர்கள் ஆவர்.
எரினாவிடமிருந்து திருடிய அவரது பை, பாஸ்போர்ட், உடை உள்ளிட்ட பொருட்களை போலீஸார்இருவரிடமிருந்தும் கைப்பற்றியுள்ளனர்.












Click it and Unblock the Notifications