அதிகாரிகளின் தமிழர் விரோதம்: நெடுமாறன் தாக்கு
பெங்களூர்:
மத்தியில் எந்த ஆட்சி நடந்தாலும் அதிகாரிகள் தமிழர்களுக்கு விரோதமாகவே நடந்துகொள்கிறார்கள் என தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் குற்றம் சாட்டினார்.
பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் இன்று நடந்த உலகத் தமிழர் பேரவையின் இரண்டாமாண்டு விழாவில்பேசிய நெடுமாறன்,
இலங்கையில் தமிழர்களை ஒடுக்க, இந்திய ராணுவத்தை மீண்டும் அந் நாட்டுக்குக் கொண்டு செல்லமுயற்சிகள் நடக்கின்றன. அதற்காகவே இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொள்ளஇலங்கை ஆர்வம் காட்டி வருகிறது.
இதற்காக இலங்கை அதிபர், பிரதமர், அமைச்சர்கள் ஆகியோர் டெல்லிக்கு படையெடுத்த வண்ணம்உள்ளனர்.
அது போன்ற ஒப்பந்தம் ஏற்படுவது தமிழர்களின் நலனுக்கு பெரும் கேட்டை விளைவிக்கும். தனக்குஅன்னிய எதிரிகள் யாரும் இல்லாத நிலையில், அப்படிப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்ததிற்கு இலங்கைஏன் ஆர்வம் காட்ட வேண்டும்?
இந்த ஒப்பந்தத் திட்டமே இலங்கையில் வாழும் தமிழர்களை ஒழித்தழிக்கும் சதி தான். இனப்பிரச்சனையில் இந்தியாவை இலங்கை பலமுறை முதுகில் குத்தியுள்ளதை மறக்கக் கூடாது.
டெல்லியில் இருப்பவர்கள் இலங்கையின் இந்த சதி வலையில் விழுந்துவிடக் கூடாது. மீண்டும்இலங்கையில் வலையில் நீங்கள் வீழ்ந்தால், மீண்டும் அவர்களால் நீங்கள்ஏமாற்றப்படுவீர்கள்.
இலங்கை, மலேசியா, தென் ஆப்பிரிகா, சிங்கப்பூர், கனடா ஆகிய தமிழர்கள் அதிகம் வசிக்கும்நாடுகளில் தமிழ் பேசும் தூதர்களை மத்திய அரசு நியமிக்க வேண்டும்.
இந்த மாநாட்டில் பங்கேற்க வந்த இலங்கை தமிழ் எம்.பி. ஈழவேந்தனை சென்னை விமானநிலையத்திலேயே தடுத்து திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். எந்த ஆட்சி வந்தாலும் போனாலும்அதிகாரிகள் தங்களை மாற்றிக் கொள்வதே இல்லை.
அவர்கள் எப்போதுமே தமிழர்களுக்கு விரோதமாகவே செயல்படுகிறார்கள். இதற்கு இன்னொருஉதாரணம் தான் ஈழவேந்தன் திருப்பி அனுப்பப்பட்டது. இது தமிழர்களுக்கு நேர்ந்துள்ளஅவமானம். இது போன்ற சம்பவம் மீண்டும் நடந்தால் மிக அபாயகரமான விளைவுகள் ஏற்படும்என்று எச்சரிக்கிறேன்.
அதிகாரிகளின் இந்தச் செயலுக்கு பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர்சிங் ஆகியோர் விளக்கம் அளித்தாக வேண்டும்.
இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க முயல்வதாக மதிமுக தலைவர் வைகோவும்உறுதியளித்திருக்கிறார் என்றார் நெடுமாறன்.
-
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது












Click it and Unblock the Notifications