தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக கடும் கண்டனம்
டெல்லி:
மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் எந்த முறைகேடும் செய்ய முடியாது என்று முதல்வர்ஜெயலலிதாவுக்கு பதில் தந்த துணை தேர்தல் கமிஷ்னருக்கு அதிமுக கடும் கண்டனம்தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் இன்று தேர்தல் கமிஷனிடம் அதிமுகவின் சார்பில் அக் கட்சியின் சட்டஆலோசகரும் ராஜ்யசபா எம்.பியுமான ஜோதி தந்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் முறைகேடு நடந்ததால் தான் மக்களவைத் தேர்தலில் அதிமுகதோற்றது. இதை எங்கள் பொதுச் செயலாளர் ஜெயலலிதா சுட்டிக் காட்டியதை, லேசாக எடுத்துக்கொண்டு பதில் தந்திருக்கிறார் துணை தேர்தல் கமிஷ்னர் ஜா.
இது ஆச்சரியம் தருகிறது. இது தொடர்பாக எங்கள் தலைவியிடம் கருத்துக் கூட கேட்கவில்லைதேர்தல் கமிஷன். முதல்வரின் குற்றச்சாட்டுக்கு ஒரு இடை நிலை அதிகாரியான துணை தேர்தல்ஆணையர் பத்திரிக்கைகள் மூலம் பதில் தந்திருக்கிறார்.
அவருக்கு என்ன அவ்வளவு அவசரம்? இது குறித்து தேர்தல் கமிஷன் தெளிவாக விசாரிக்கவேண்டும். எங்கள் கருத்தைக் கேட்க நாள் ஒதுக்க வேண்டும். மக்களவைத் தேர்தலின்போதுமின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் எப்படி முறைகேடு நடந்தது என்பது குறித்து விளக்கஎங்களுக்கு வாய்ப்பு தர வேண்டும்.
தேர்தலுக்கு முன்பும், தேர்தலின்போதும், தேர்தலுக்குப் பின்பும் வாக்குப் பதிவு எந்திரங்களில்முறைகேடு நடந்துள்ளது என்பது அதிமுகவின் அசைக்க முடியாத கருத்தாகும் என்று அந்த மனுவில்கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications