3 மருத்துவ கல்லூரிகளில் மீண்டும் ஆய்வு
திருநெல்வேலி:
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரிகளில் இன்று இந்திய மருத்துவக் கவுன்சில் குழுமீண்டும் ஆய்வு மேற்கொண்டது.
கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரியைத் தொடங்க அங்கீகாரம், தூத்துக்குடியில் முதலாமாண்டு மாணவர்சேர்க்கைக்கு அனுமதி, நெல்லை மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 50 மாணவர் இடங்கள் ஆகியவற்றைக் கோரிஇந்திய மருத்துவக் கவுன்சிலிடம் தமிழக அரசு விண்ணப்பித்திருந்தது.
இதையடுத்து சமீபத்தில் இந்திய மருத்துவக் கவுன்சில் ஆய்வுக் குழு இந்த மூன்று மருத்துவக் கல்லூரிகளிலும்ஆய்வு நடத்தியது. அப்போது போதிய ஊழியர்கள் இல்லாதது, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாததுஆகியவற்றைக் காரணம் காட்டி 3 கல்லூரிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
இந்திய மருத்துவக் கவுன்சிலின் நடவடிக்கை குறித்து தமிழக அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. திமுக உள்ளிட்டஎதிர்க்கட்சிகளும் தமிழக மாணவர்களின் நலன் கருதி இந்தப் பிரச்சினையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்அன்புமணி தலையிட கோரினர்.
இதைத் தொடர்ந்து இந்திய மருத்துவக் கவுன்சிலைச் சேர்ந்த 3 குழுக்கள் இன்று 3 கல்லூரிகளுக்கும் வருகை தந்துமறு ஆய்வு மேற்கொண்டது. இன்றும் முன்பு போலவே, வெளியூர்களிலிருந்து அழைத்து வரப்பட்ட டாக்டர்கள்,செவிலியர்கள் உள்ளிட்டோர் பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications