திருச்சியில் 3 பேர் ஓட ஓட விரட்டி படுகொலை
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி அருகே நீதிமன்றத்திற்கு காரில் வந்த 3 பேர் தடுத்து நிறுத்தப்பட்டு சரமாரியாக வெட்டிப் படுகொலைசெய்யப்பட்டனர்.
திருச்சி அருகே உள்ளது மணிகண்டம். இதற்கு அருகே உள்ள நாகமங்கலம் என்ற பகுதியைச் சேர்ந்த சேது, சுரேஷ்,கில்லி ஆகிய 3 பேரும் ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர்கள். இந்த வழக்கு விசாரணைக்காக திருச்சிநீதிமன்றத்திற்கு 3 பேரும் காரில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களது காரை ஒரு கார் தடுத்து நிறுத்தியது. காரில் இருந்தவர்கள் சுரேஷ், சேது, கில்லி ஆகிய 3பேரையும் சரமாரியாக வெட்டத் தொடங்கினர். இதில் சேது என்பவரின் தலை துண்டிக்கப்பட்டது. மற்ற இருவரும்ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டனர்.
பட்டப் பகலில் 3 பேர் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்டது திருச்சியில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications