வழக்கறிஞர் பதவிகள்: திமுகவுக்கு காங். கண்டனம்
சென்னை:
மத்திய அரசு வழக்கறிஞர்களாக திமுகவினரை மட்டுமே நியமித்துள்ளதற்கு காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு கடும்கண்டனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் தமிழக நீதிமன்றங்களில் மத்திய அரசுக்கான வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டனர். மத்திய சட்டத் துறையால்நியமிக்கப்பட்ட இவர்கள் அனைவரும் திமுகவைச் சேர்ந்தவர்கள்.
இந்தப் பதவிகளைப் பிடிக்க காங்கிரசார், மத்திய சட்டத்துறை அமைச்சர் பரத்வாஜை தொடர்பு கொண்டபோது, இது தமிழகவிவகாரம் என்பதால், திமுக தலைவரின் அனுமதியைப் பெற்றுவிட்டு வருமாறு கூறி திருப்பி அனுப்பிவிட்டார்.
தங்களது கட்சி மத்தியில் ஆட்சியில் இருக்கும்போதே திமுகவைக் கேட்டுத்தான் முடிவெடுக்க முடியும் என சட்ட அமைச்சர்கூறிவிட்டதையடுத்து சென்னை திரும்பிய அவர்கள், திமுக தலைவர் கருணாநிதியை அவர்கள் சந்தித்தாகவும், ஆனால் அவர்உறுதிமொழி ஏதும் தரவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந் நிலையில் மத்திய சட்டத்துறை இணையமைச்சர் வேங்கடபதி மூலமாக தனது கட்சி வழக்கறிஞர்களை அந்தப் பதவிகளுக்குநியமித்துவிட்டது திமுக.
இதற்கு காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு கடும் எதிர்ப்பும், அதிருப்தியும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சட்டத்துறைஅமைச்சர் பரத்வாஜுக்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர்கள் சார்பில் வழக்கறிஞர் சுரேஷ்குமார் எழுதியுள்ள கடிதத்தில்,
தமிழக காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர்களின் கெளரவத்தைக் காப்பாற்றுங்கள். தமிழகத்தில் காலியாகவுள்ள மத்தியவழக்கறிஞர்கள் பணியிடங்களில் காங்கிரஸ் கட்சியினரையும் நியமிக்க வகை செய்யுங்கள்.
சமீபத்திய பட்டியல் முழுவதிலும் திமுக வழக்கறிஞர்களேஇடம் பெற்றிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், அதிருப்தியையும்ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications