முத்திரைத் தாள் மோடி: சிபிஐக்கு திமுக கடிதம்
சென்னை:
போலி முத்திரைத் தாள் மோசடியில் தொடர்புடைய குற்றவாளிகள், அதிகாரிகள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சிபிஐக்கு திமுக கடிதம் எழுதியுள்ளது.
அப்துல் கரீம் தெல்கியை மையமாகக் கொண்டு நடந்த இந்த பல்லாயிரம் கோடி போலி முத்திரைத் தாள் மோசடியில் சிபிசிஐடிடிஐஜி முகமது அலி உள்ளிட்ட அதிகாரிகள், அச்சகர்கள், புரோக்கர்கள், அதிகாரிகளுக்கு பண பட்டுவாடா செய்த பெண்கள் எனபெரும் கும்பலே சிக்கியுள்ளது.
இந் நிலையில் சிபிஐக்கு திமுக சார்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில்,
இந்த 30,000 கோடி ரூபாய் மோசடியை மூடி மறைக்க முயற்சி நடந்து வருவதாக முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் நடந்தபத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது கூறியுள்ளார். இது குறித்த விவரங்களை சிபிஐக்குத் தெரிவிக்க வேண்டியதுஜெயலலிதாவின் கடமை.
மேலும் 2001ம் ஆண்டு மே மாதத்துக்குப் பின் சுமார் 1,000 புதிய முத்திரைத் தாள் விற்பனையாளர்களுக்கு தமிழக அரசுலைசென்ஸ் வழங்கியுள்ளது. இவ்வளவு அதிகமான முத்திரைத் தாள் வியாபாரிகள் நியமிக்கப்பட்டது ஏன் என்று மக்கள் மனதில்சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த ஐயத்தைப் போக்க வேண்டியது முதல்வர் ஜெயலலிதாவின் கடமையாகும்.
அடுத்ததாக, தமிழக அரசின் பதிவுத் துறையின் கண்காணிப்புப் பிரிவு எந்தக் காரணமும் இல்லாமல் திடீரெனகலைக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசுடன் தொடர்பு கொண்டவர்களிடம் முழுமையாக விசாரணை நடத்தி, குற்றம் செய்தஅனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
இவ்வாறு திமுகவின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications