For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்து வழக்கு: அரசியல் சட்ட பெஞ்ச் விசாரிக்கும்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

இந்து, முரசொலி பத்திரிக்கைகளின் ஆசிரியர்கள், 4 நிருபர்களைக் கைது செய்ய தமிழக சட்டமன்ற சபாநாயகர் காளிமுத்துபிறப்பித்த வாரண்ட் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் இந்து, முரசொலி பத்திரிக்கைகள் சட்டமன்ற உரிமையை மீறிவிட்டதாகக் கூறி அதன் ஆசிரியர்கள்,நிருபர்கள் உள்பட 6 பேரை கைது செய்து 15 நாள் சிறையில் அடைக்க சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்துபத்திரிக்கையாளர்களின் வீடுகளில் இரவு நேரத்தில் குண்டர்களைப் போல நுழைந்த போலீசார் அத்துமீறி நடந்து கொண்டனர்.

பெங்களூரில் நள்ளிரவில் இந்து ஆசிரியர் ராமின் காரை வழிமறித்து கலாட்டா செய்தது தமிழக போலீஸ். இதற்கு தேசிய அளவில்இதற்குக் கடும் கண்டனம் எழுந்தது. இந்து அலுவலகத்தில் வாரண்ட் இல்லாமல் நுழைந்த போலீசாரை ஊழியர்கள்விரட்டிவிட்டனர்.

இந்தக் கைது உத்தரவை எதிர்த்தும், தங்கள் மீது உரிமைப் பிரச்சனை கிளப்ப சட்டமன்றக்குக்கு அதிகாரம் உண்டா என்று கேள்விஎழுப்பியும் இந்து ஆசிரியர் ராம், முரசொலி ஆசிரியர் செல்வம் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இதையடுத்து கைது நடவடிக்கைக்கு நீதிமன்றம் தடை விதித்தது.

இந் நிலையில், இந்த மனுக்கள் இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. அப்போது கைது செய்யவிதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து உத்தரவிட்ட தலைமை நீதிபதி லஹோட்டி, இந்த இரு மனுக்களும்சட்டமன்றத்தின் அதிகாரம் குறித்த அரசியல் சட்ட கேள்விகளை எழுப்பியுள்ளதால், இவற்றை அரசியல் சட்ட பெஞ்ச் விசாரிக்கஉத்தரவிட்டார்.

அரசியல் சட்டத்தின் 19வது பிரிவு அளித்திருக்கும் கருத்து சுந்திரத்தை சட்டமன்றத்தின் 194(3) வது பிரிவு பறிப்பதாக இந்து ராம்தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X