கைதான அதிகாரிகளுக்கு ஜாமீன் மறுப்பு
கும்பகோணம்:
கும்பகோணம் பள்ளித் தீ விபத்து தொடர்பாக கைதாகியுள்ள தாசில்தார், கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்ட 9பேருக்கும் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கும்பகோணம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த ஜாமீன் மனுக்கள் மீது விசாரணை நடந்தது. இவர்களுக்காக ஆஜராக உள்ளூர்வழக்கறிஞர்கள் ஒருவரும் முன் வரவில்லை. இதையடுத்து மதுரை, தஞ்சாவூரில் இருந்து வழக்கறிஞர்களை கைதானவர்கள் அழைத்துவந்தனர்.
அந்த வழக்கறிஞர்களை நீதிமன்றத்தில் ஆஜராக விடாமல் உள்ளூர் வழக்கறிஞர்கள் தடுத்து கோஷம் போட்டு பிரச்சனை கிளப்பினர்.அதையும் தாண்டி ஜாமீன் மனுக்கள் மீது விசாரணை நடந்தது.
அப்போது இந்த 9 பேரின் ஜாமீன் மனுக்களையும் மாஜிஸ்திரேட் கிங்ஸ்லி கிரிஸ்டோபர் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்தத் தீ விபத்து தொடர்பாக இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications